பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய பிரதேசம் செல்கிறார். அவர் ஜபுவாவில் 7,300 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஆஹர் அனுதன் யோஜனா திட்டத்தின் கீழ், சுமார் 2 லட்சம் பெண் பயனாளிகளுக்கு மாதாந்திர தவணைகளில் மோடி ஆஹர் அனுதானை விநியோகிக்கிறார். இந்தத் திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு குறிப்பாக பிற்படுத்தப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சத்தான உணவுக்காக மாதம் ரூ.1500 வழங்கப்படும்.
அவர் SVAMITVA திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.75 லட்சம் அதிகார் அபிலேக் (உரிமைப் பத்திரம்) விநியோகிக்கிறார். இது மக்களுக்கு அவர்களின் நில உரிமைகள் பற்றிய ஆவண ஆதாரங்களை வழங்குகிறது. பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் 559 கிராமங்களுக்கு 56 கோடி ரூபாயை பிரதமர் மாற்றுவார். இத்தொகை அங்கன்வாடி வீடுகள், நியாயவிலைக் கடைகள், சுகாதார நிலையங்கள், பள்ளிகளில் கூடுதல் அறைகள், சாலைகள் போன்ற பல்வேறு வகையான கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.