கனடா முழுவதும் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் தொடர்ந்து பரவி வருவதால், ஆல்பர்ட்டாவின் உயர்மட்ட மருத்துவர்கள் மாகாணத்தை விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்துள்ளனர். நாட்டில் குழந்தைகளிடையே ஸ்ட்ரெப் ஏ தொற்று சாதனை விகிதத்தில் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆல்பர்ட்டாவில் வசிக்கும் மக்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.
ஸ்ட்ரெப் ஏ தொற்று பள்ளி மாணவர்களிடையே பரவ வாய்ப்புள்ளது. எனவே, ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த மாதம், ஒன்ராறியோவில் ஆறு குழந்தைகள் ஸ்ட்ரெப் ஏ நோயால் இறந்தனர். இதைத் தொடர்ந்து ஆல்பர்ட்டாவில் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.