இரத்த வங்கிகளில் இரத்தம் தட்டுப்பாடு இந்த விடுமுறை காலத்தில் நெருக்கடியை உருவாக்குவதாக கனடிய இரத்த சேவைகள் கூறுகின்றன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, விடுமுறை கொண்டாட்டங்களில் மும்முரமாக இருக்கும் கனடியர்களை முன் வந்து இரத்த தானம் செய்ய இரத்த சேவைகள் வேண்டுகோள் விடுக்கின்றன. பிஸியான பருவத்தில் இருந்தாலும் இரத்தம் மற்றும் பிளாஸ்மாவின் தேவை மிகவும் முக்கியமானது என்று இரத்த சேவைகள் கூறுகின்றன.
வரவிருக்கும் வாரங்களில் மருத்துவமனைகளில் இரத்தம் இல்லாததால் இருப்புக்கள் அவசியம். புற்றுநோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், அதிர்ச்சி சிகிச்சையில் உள்ள நோயாளிகள் மற்றும் பல ஆபத்தில் உள்ள மக்களுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. விடுமுறை காலம் என்பதால் மக்கள் பல கொண்டாட்டங்களிலும், உல்லாசப் பயணங்களிலும் ஈடுபடுவார்கள். பல்வேறு பிஸியான கால அட்டவணைகளால் இரத்த தானம் செய்ய முடியாமல் போகலாம்.
ஆனால் தேவையான இரத்தத்தை சேமித்து வைக்க, குறைந்தது 30,000 இரத்த தானம் செய்பவர்கள் இரத்த தானம் செய்ய வேண்டும்.
டிசம்பர் மற்றும் ஜனவரி முதல் வாரத்தில் விடுமுறை நாட்களில் இரத்த தானம் மற்றும் சேகரிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே இந்த நாட்களில் அவசரமாக இரத்த தானம் செய்யுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.