தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்காவின் ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யக்கூடாது என பிலிப்பைன்ஸை சீனா எச்சரித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.மூலோபாய கடல் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் இராணுவ அறிக்கையின்படி, படானஸ் தீவுகளின் பகுதியில் கடற்படை மற்றும் விமான கூட்டு ரோந்துகள் நடத்தப்படுகின்றன என்று கிடைக்கக்கூடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.