நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். நாரி சக்தி வந்தான் ஆதினியம் என்ற பெயரில் சட்டம் இயற்றுவதற்கான அரசிதழ் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன், தற்போது அது சட்டமாக மாறியுள்ளது.மக்களவை, மாநிலங்களவை மற்றும் டில்லி சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டம் கட்டாயமாக்கியுள்ளது. பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு இந்த பிரிவினருக்கு தற்போதுள்ள ஒதுக்கீட்டிற்குள் வழங்கப்படும்.